search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ
    X
    இஸ்ரோ

    நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் - இஸ்ரோ

    நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    இன்று அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.
     
    400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

    இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். மேலும், இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பலவேறு முக்கிய தலைவர்கள் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்ரோ இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான் 2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×