என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி ஓட்டலில் ‘Article 370 தாளி’ உணவு -காஷ்மீர் மக்களை வரவேற்க ஏற்பாடு
Byமாலை மலர்7 Sep 2019 9:28 AM GMT (Updated: 7 Sep 2019 9:28 AM GMT)
காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் வித்தியாசமாக ‘Article 370 தாளி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லி:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மேலும் லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதையடுத்து காஷ்மீரில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபல ஓட்டல், ‘Article 370 தாளி’ என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
சைவ தாளியில் காஷ்மீர் புலாவ் உள்ளிட்ட பல உணவு வகைகள் வழங்கப்படும். அசைவமாக இருந்தால் சைவ உணவுகளுடன் காஷ்மீர் ஆட்டுக்கறியும் சேர்த்து வழங்கப்படும். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறியதாவது:
நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், மிகப்பெரிய குடும்பமாக இருப்பதற்கும் எங்கள் ஓட்டலின் பங்களிப்புதான் ‘Article 370 தாளி’.
மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு ‘Article 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மேலும் லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதையடுத்து காஷ்மீரில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபல ஓட்டல், ‘Article 370 தாளி’ என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ‘Article 370 தாளி’ ரூ.2,370 (சைவம்), ரூ.2,669 (அசைவம்) என்று 2 வகைகளில் வழங்கப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தால், அரசு அடையாள அட்டை ஒன்றை காட்டினால் இந்த விலையில் ரூ.370 குறைக்கப்படும்.
சைவ தாளியில் காஷ்மீர் புலாவ் உள்ளிட்ட பல உணவு வகைகள் வழங்கப்படும். அசைவமாக இருந்தால் சைவ உணவுகளுடன் காஷ்மீர் ஆட்டுக்கறியும் சேர்த்து வழங்கப்படும். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறியதாவது:
நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், மிகப்பெரிய குடும்பமாக இருப்பதற்கும் எங்கள் ஓட்டலின் பங்களிப்புதான் ‘Article 370 தாளி’.
மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு ‘Article 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X