என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாலக்காடு அருகே பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்த நக்சல் தடுப்பு போலீசார்
கொழிஞ்சாம்பாறை:L
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி அகளியில் கோட்டியார்க்கண்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் 4 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டன. மலைப்பகுதிகளில் கஞ்சா செடி இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இங்கு பயிரிடப்பட்டுள்ள கஞ்சா செடிகளின் சந்தை மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த மலைப்பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி நவநீத் சர்மா கூறியதாவது:
கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு சப்ளை செய்வதற்காக இங்கு கஞ்சா செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கிருந்து தான் பலபகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளது. எனவே அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்