என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் மழைக்கு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரமூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 40). அதேபகுதியை சேர்ந்த மோகன்பிள்ளை மகன் அருண்லால்(32). இவர்களது நண்பர்கள் சுதி(23), விஷ்ணு(18).
இவர்கள் 4 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே இருக்கும் கட்டிடத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
மழை காரணமாக அந்த கட்டிடத்தின் உள்பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதில் 4 பேரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பரமூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட 4 பேரையும் மீட்டனர்.
இதில் ரஞ்சித், அருண்லால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சுதி மற்றும் விஷ்ணுவை மீட்டு பாரிபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்