என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திரயானை தனது சாதனையாக்க துடிக்கிறது பாஜக - மம்தா குற்றச்சாட்டு
Byமாலை மலர்6 Sep 2019 4:51 PM GMT (Updated: 6 Sep 2019 4:51 PM GMT)
இஸ்ரோவின் சந்திரயான் 2 சாதனையை பாஜக தனது சாதனையாக்க துடிப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா:
சந்திரயான் 2 விண்கலம், நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும்.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி மாநில சட்டசபையில் பேசுகையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை தங்களால்தான் சாத்தியமாகி உள்ளது என பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள்.
மேலும், திடீரென பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையிடத்துக்கு சென்றுள்ளார். சந்திராயன் 2 வெற்றிக்கு பிறகு அடுத்த சில நாட்களுக்கு வேறு எந்த விவாதமும் நடைபெறாது. சந்திரயான் 2 சாதனையை பாஜக தனது சாதனை போலவும், ஏதோ தாங்கள் தான் அறிவியலை கண்டுபிடித்தது போலவும் பேசுகிறார்கள்.
இந்தியாவில் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் 60 முதல் 70 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆகையால், சந்திரயான் 2-வின் சாதனை முழுவதும் இஸ்ரோவுக்கு உரியது. என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X