என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை உயர்ந்ததை நகைக்கடை ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினார்களா?
Byமாலை மலர்6 Sep 2019 4:08 AM GMT (Updated: 6 Sep 2019 5:58 AM GMT)
தங்கம் விலை உயர்ந்ததை நகைக்கடை ஊழியர்கள் நடனமாடி கொண்டாடியதாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வீடியோ குறித்து பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு மாத இடைவெளியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இடையில் அவ்வப்போது சற்று விலை குறைந்து இருந்தாலும், மறுநாளிலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.
இதன் காரணமாக நகை கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. அந்த வகையில், டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடுவதாக குறிப்பிட்டு, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வீடியோ டெல்லியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த வருடம் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. தினமும் பாடல் பாடி, நடனம் ஆடி வேலையை தொடங்குவதை வழக்கமாக கொண்டு, அதனை தினமும் கடைபிடித்து வருகின்றனர்.
Gold @ ₹40,000/-
— Manoj Dhoopchandi (@manojdhopchandi) September 3, 2019
No customers, Employees passing time !!! pic.twitter.com/JrkndG5oGv
இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X