search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டிடம் இடிந்த பகுதி
    X
    கட்டிடம் இடிந்த பகுதி

    குஜராத்தில் கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி

    குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர். 

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 5 பேரை 
    உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மீட்புப்பணியில் ஈடுபடும் காட்சி
     
    மேலும், சிலர் இடிபாடுகளுக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதால் தேடுதல் பணிகள் திவீரமாக நடைபெற்றுவருவதாக மீட்புக்குழுவினர் 
    தெரிவித்துள்ளனர். இடிந்து விபத்துக்குள்ளான கட்டிடம் கிட்டத்தட்ட 100 வருடங்கள் பழமையானது என உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×