search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரம் வாங்க வரிசையில் காத்து நின்ற விவசாயிகள்
    X
    உரம் வாங்க வரிசையில் காத்து நின்ற விவசாயிகள்

    உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு- தெலுங்கானா அரசு மீது பாஜக பாய்ச்சல்

    தெலுங்கானாவில் உரம் வாங்க வரிசையில் காத்திருந்த விவசாயி உயிரிழந்தது தொடர்பாக மாநில அரசு மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சொசைட்டிகளில் உரம் வாங்குவதற்கு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இந்த விஷயத்தில் மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், மத்தியில் ஆளும் பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தொகுதியான துப்பகா தொகுதியில், இன்று காலையில் யூரியா உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்ற எல்லையா என்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்துபோனார். இந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    யூரியா உரம்

    இந்த விவகாரத்தில் மாநில அரசை பாஜக குறை கூறி உள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் சரியாக இல்லாததால் விவசாயிகள் துயரத்தை சந்தித்து வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் கூறியுள்ளார்.

    “மாநில விவசாயத் துறையின் தவறான நிர்வாகத்தால் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு மத்திய அரசு 8.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்த சீசனுக்கு வெறும் 6.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியாதான் தேவை. பருவ காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான யூரியா மாநிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.

    எனினும், சப்ளை செய்வதில் போதிய திட்டமிடல் இல்லை. யூரியா வாங்குவதில் விவசாயிகள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். விவசாயி உயிரிழப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கிருஷ்ணா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×