என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரம் வாங்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு- தெலுங்கானா அரசு மீது பாஜக பாய்ச்சல்
Byமாலை மலர்5 Sep 2019 10:00 AM GMT (Updated: 5 Sep 2019 10:00 AM GMT)
தெலுங்கானாவில் உரம் வாங்க வரிசையில் காத்திருந்த விவசாயி உயிரிழந்தது தொடர்பாக மாநில அரசு மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சொசைட்டிகளில் உரம் வாங்குவதற்கு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இந்த விஷயத்தில் மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், மத்தியில் ஆளும் பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசை பாஜக குறை கூறி உள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் சரியாக இல்லாததால் விவசாயிகள் துயரத்தை சந்தித்து வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் கூறியுள்ளார்.
“மாநில விவசாயத் துறையின் தவறான நிர்வாகத்தால் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு மத்திய அரசு 8.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்த சீசனுக்கு வெறும் 6.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியாதான் தேவை. பருவ காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான யூரியா மாநிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
எனினும், சப்ளை செய்வதில் போதிய திட்டமிடல் இல்லை. யூரியா வாங்குவதில் விவசாயிகள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். விவசாயி உயிரிழப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கிருஷ்ணா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சொசைட்டிகளில் உரம் வாங்குவதற்கு விவசாயிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். இந்த விஷயத்தில் மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், மத்தியில் ஆளும் பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தொகுதியான துப்பகா தொகுதியில், இன்று காலையில் யூரியா உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்ற எல்லையா என்ற விவசாயி திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்துபோனார். இந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அரசை பாஜக குறை கூறி உள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறன் சரியாக இல்லாததால் விவசாயிகள் துயரத்தை சந்தித்து வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் கூறியுள்ளார்.
“மாநில விவசாயத் துறையின் தவறான நிர்வாகத்தால் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு மத்திய அரசு 8.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்த சீசனுக்கு வெறும் 6.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியாதான் தேவை. பருவ காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான யூரியா மாநிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
எனினும், சப்ளை செய்வதில் போதிய திட்டமிடல் இல்லை. யூரியா வாங்குவதில் விவசாயிகள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். விவசாயி உயிரிழப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கிருஷ்ணா சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X