என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொருளாதார மந்தநிலையை சைகையால் உணர்த்திய ப.சிதம்பரம்
Byமாலை மலர்3 Sep 2019 5:02 PM GMT (Updated: 3 Sep 2019 5:02 PM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கெடுப்பின் முடிவில் 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை வெளியானது.
கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 5-ம் தேதி வரை விசாரணை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே அழைத்து வந்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் சிபிஐ காவல் நீட்டிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் தனது கைவிரல்களை உயர்த்தி, 5 சதவீதம். அப்படி என்றால் என்ன என தெரியுமா? என நிரூபரை பார்த்து கேள்வி கேட்டார்.
இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 'இதுபோன்ற பொருளாதார ரீதியிலான கேள்விகளை கேட்பதால் தான் ப.சிதம்பரத்தை கண்டு பா.ஜ.க. அரசு பயப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X