என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நக்சலைட்டின் உயிரை காக்க தங்கள் தோளில் சுமந்து செல்லும் போலீசார்
Byமாலை மலர்2 Sep 2019 4:31 PM GMT (Updated: 2 Sep 2019 4:42 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நக்சலைட்டை பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்ததால் அவரை போலீசார் 12 கீ.மீ சுமந்து மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் செயல்பட்டுவரும் நக்சலைட்டுகள் பொது அமைதிக்கு குந்தகம் விழைவிக்கும் வகையில் அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்களை அறங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை தடுத்து நிறுத்த சில மாநிலத்தால் அமைக்கப்பட்ட தனிப்படை பிரிவினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் தேடப்பட்டுவந்த நக்சல் ஒருவனை கைது செய்தனர். அந்த நக்சலைட்டின் தலைக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த சோதனையின் போது காயமடைந்த நக்சலைட்டுக்கு சிகிச்சை அளிக்க அருகில் மருத்துவமனை இல்லாததால் சுமார் 12 கீ.மீட்டர் தூரம் அவரை போலீசார் தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X