search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ இன்று வெளியிட்ட புகைப்படம்
    X
    இஸ்ரோ இன்று வெளியிட்ட புகைப்படம்

    நிலவின் சுற்று வட்டப்பாதையில் இறுதி நிலையை கடந்து முன்னேறியது சந்திரயான் 2

    சந்திரயான்-2 விண்கலம் இன்று மாலை நிலவின் சுற்று வட்டப்பாதையில் ஐந்தாவது மற்றும் இறுதி நிலையை கடந்து முன்னேறிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
    பெங்களூரு:

    நிலவை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
     
    இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சந்திரயான் 2

    பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

    ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

    இந்நிலையில், சந்திரயான்-2  விண்கலம் நிலவின் இறுதிச்சுற்றான 5-வது நிலையை கடந்து  இன்று முன்னேறியுள்ளது. விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தவாறு இன்று மாலை 6.21 மணிக்கு  இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    நாளை இரண்டாக பிரியும் சந்திரயான் - 2 விண்கலம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.55 மணி அளவில் நிலவில் தரை இறக்கப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும்.

    விக்ரம் லேண்டரில் இருந்து ’பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    Next Story
    ×