என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலவின் சுற்று வட்டப்பாதையில் இறுதி நிலையை கடந்து முன்னேறியது சந்திரயான் 2
Byமாலை மலர்1 Sep 2019 3:35 PM GMT (Updated: 1 Sep 2019 3:35 PM GMT)
சந்திரயான்-2 விண்கலம் இன்று மாலை நிலவின் சுற்று வட்டப்பாதையில் ஐந்தாவது மற்றும் இறுதி நிலையை கடந்து முன்னேறிச் சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூரு:
நிலவை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.
இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் இறுதிச்சுற்றான 5-வது நிலையை கடந்து இன்று முன்னேறியுள்ளது. விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தவாறு இன்று மாலை 6.21 மணிக்கு இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நாளை இரண்டாக பிரியும் சந்திரயான் - 2 விண்கலம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.55 மணி அளவில் நிலவில் தரை இறக்கப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும்.
விக்ரம் லேண்டரில் இருந்து ’பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.
இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் இறுதிச்சுற்றான 5-வது நிலையை கடந்து இன்று முன்னேறியுள்ளது. விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தவாறு இன்று மாலை 6.21 மணிக்கு இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நாளை இரண்டாக பிரியும் சந்திரயான் - 2 விண்கலம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.55 மணி அளவில் நிலவில் தரை இறக்கப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும்.
விக்ரம் லேண்டரில் இருந்து ’பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X