search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரத்தில் தீப்பிடித்து எரியும் ஜவுளி ஆலை
    X
    சூரத்தில் தீப்பிடித்து எரியும் ஜவுளி ஆலை

    சூரத் ஜவுளி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் நாசம்

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் கருகின.
    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரின் பந்தேசரா பகுதியில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் எழுந்தது. ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியதும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

    தீயணைப்பு பணியில் வீரர்கள்

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு படையினர், 18 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி மற்றும் மூலப்பொருட்கள் கருகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×