என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு- 19 லட்சம் பேரின் பெயர் இல்லை
Byமாலை மலர்31 Aug 2019 5:22 AM GMT (Updated: 31 Aug 2019 5:22 AM GMT)
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.
வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானோர் மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இறுதி வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி என்ஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “இந்த பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம்” என்றார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில் தற்போது அது பாதியாக குந்துள்ளது.
அசாம் குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி, அசாம் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.
வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானோர் மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இறுதி வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், அசாமில் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
இதுபற்றி என்ஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “இந்த பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம்” என்றார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில் தற்போது அது பாதியாக குந்துள்ளது.
அசாம் குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி, அசாம் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X