என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 வயது சிறுமி கற்பழிப்பு - மகாராஷ்டிரா வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்30 Aug 2019 10:39 AM GMT (Updated: 30 Aug 2019 10:39 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பால்கர்:
மகாராஷ்டிராவின் வசாய் பகுதியை சேர்ந்தவர் குப்தா. இவர் கடந்த 2017 ஆண்டு ஜூன் 23-ம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு 4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து கடத்தி சிறுமியை கற்பழித்துள்ளார். சிறுமியின் பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் சிறுமியை கடத்தியிருந்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குப்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து குற்றவாளியான குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்ட உதவி மையம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X