என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை - ஏர் இந்தியா முடிவு
Byமாலை மலர்29 Aug 2019 10:35 AM GMT (Updated: 29 Aug 2019 10:35 AM GMT)
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்ற மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் அஷ்வானி கூறுகையில், அக்டோபர் 2 ம் தேதி முதல் விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக இனி பேப்பர் கப்களும், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் டம்ளர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X