search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்ற சீதாராம் யெச்சூரி
    X
    ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்ற சீதாராம் யெச்சூரி

    கட்சி நிர்வாகியை சந்திக்க ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி

    முன்னாள் எம்எல்ஏவும் தமது கட்சி நிர்வாகியுமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் புறப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவரும் தனது நண்பருமான முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க விரும்புவதாகவும், இதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதி வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.

    ஸ்ரீநகருக்கு புறப்பட்ட சீதாராம் யெச்சூரி

    இதையடுத்து தனது கட்சி எம்.எல்.ஏவான யூசுப் தாரிகாமியை சந்திக்க சீதாரம் யெச்சூரி இன்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றார்.

    சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் செல்லும் போது வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி ஈடுபட்டால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×