search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் தீப்பிடித்து எரியும் காட்சி
    X
    ரெயில் தீப்பிடித்து எரியும் காட்சி

    தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து- போக்குவரத்து நிறுத்தம்

    அரியானா மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் அசோதி பல்லப்கர் பகுதியில் இன்று காலை தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் உள்ள இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

    இதனைக் கண்ட டிரைவர், உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அதில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் வெளியேறினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் தீப்பிடித்து எரிந்ததால், அங்கு இருவழிப்பாதையிலும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    தீப்பிடித்ததை உரிய நேரத்தில் கண்டறிந்து ரெயிலை நிறுத்தியதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×