search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராம் யெச்சூரி
    X
    சீதாராம் யெச்சூரி

    சீதாராம் யெச்சூரி நாளை காஷ்மீர் செல்கிறார்

    உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு சில நாட்களாக பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. 

    ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடந்த 9-ம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், தனது நண்பருமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரி சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

    காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் வீரர்கள்

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அவர் தனது கட்சி நிர்வாகி யுசிப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம் எனவும், ஆனால் எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கியது. 

    இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து நாளை (வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் பயணம் செய்யவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் உள்ள தனது நண்பர் யூசுப் தரிகாமியை சந்தித்து அவரது உடல் நிலைகுறித்து விசாரித்து விட்டு இந்த பயணம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாக அவர் கூறினார்.   

    Next Story
    ×