search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடம்புரண்ட ரெயில்
    X
    தடம்புரண்ட ரெயில்

    கான்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து

    கான்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரெயில் நிலையத்தில் உள்ள 3வது பிளாட்பாரத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது. அப்போது அந்த ரெயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 4 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

    இதையடுத்து அந்த பெட்டிகளில் உள்ள பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தடம்புரண்ட ரெயில்

    முன்னதாக நேற்று நள்ளிரவில் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமத்தில், ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 15 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மீட்பு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்து காரணமாக பிரதான பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×