என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி- சித்தராமையா
Byமாலை மலர்28 Aug 2019 2:10 AM GMT (Updated: 28 Aug 2019 2:10 AM GMT)
முதல்-மந்திரி எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஜமகண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பாவை முதல்- மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை. ஆனால் அவர் கெஞ்சி கேட்டு, முதல்-மந்திரி பதவியை பெற்றுள்ளார். துணை முதல்-மந்திரி பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. அந்த பதவிக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது.
கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 பேருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியுள்ளது. இதை எடியூரப்பா விரும்பவில்லை. எடியூரப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் ஆகியோரை பா.ஜனதா ஓரங்கட்டியுள்ளது.
அதனால் பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்க வாய்ப்புள்ளது. எடியூரப்பா எத்தனை நாட்கள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டோம். இந்த பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஜமகண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பாவை முதல்- மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை. ஆனால் அவர் கெஞ்சி கேட்டு, முதல்-மந்திரி பதவியை பெற்றுள்ளார். துணை முதல்-மந்திரி பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. அந்த பதவிக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது.
கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 பேருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியுள்ளது. இதை எடியூரப்பா விரும்பவில்லை. எடியூரப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் ஆகியோரை பா.ஜனதா ஓரங்கட்டியுள்ளது.
அதனால் பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்க வாய்ப்புள்ளது. எடியூரப்பா எத்தனை நாட்கள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டோம். இந்த பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X