என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்
Byமாலை மலர்26 Aug 2019 8:40 PM GMT (Updated: 26 Aug 2019 8:40 PM GMT)
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்குக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், நாட்டின் அதிகபட்ச பாதுகாப்பு வசதியான ‘சிறப்பு பாதுகாப்பு குழு’ (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உயிருக்கான அச்சுறுத்தல் அடிப்படையில், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், மந்திரிசபை செயலகமும் 3 மாதங்களாக ஆய்வு செய்தன. அதில், மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இது, உயிருக்கு அச்சுறுத்தல் அடிப்படையில், பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மட்டுமே தற்போது பெற்று வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், நாட்டின் அதிகபட்ச பாதுகாப்பு வசதியான ‘சிறப்பு பாதுகாப்பு குழு’ (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உயிருக்கான அச்சுறுத்தல் அடிப்படையில், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், மந்திரிசபை செயலகமும் 3 மாதங்களாக ஆய்வு செய்தன. அதில், மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், மன்மோகன் சிங்குக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இது, உயிருக்கு அச்சுறுத்தல் அடிப்படையில், பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மட்டுமே தற்போது பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X