search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    முன்ஜாமீன் விவகாரம்- ப.சிதம்பரத்தின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    முன்ஜாமீன் வழங்க மறுத்து டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    உச்ச நீதிமன்றம்

    அப்போது, ப.சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்திருப்பதால், முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
    Next Story
    ×