search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

    பீகார் மாநில எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் ஜெகனாபாத் ரெயில் நிலையம் அருகே பாட்னா நோக்கி ‘பாலமு’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண், 4 குழந்தைகளுடன் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அந்த பெண் மற்றும் 3 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    போலீசார் விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண், 6 முதல் 12 வயது வரையிலான தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×