search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

    மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது:

    இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர்.

    சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது.  அவரது 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும்.

    இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன் என குறிப்பிட்டார்.
    Next Story
    ×