search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணபூர் மாவட்டத்தில் உள்ளது ஆர்ச்சா காவல் நிலையம். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள துர்பேடா கிராமத்தின் காட்டு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது முகாமில் இருந்து அதிக அளவிலான பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையில் போலீசார் இருவர் காயம் அடைந்தனர்.

    Next Story
    ×