என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி- பலர் காயம்
Byமாலை மலர்24 Aug 2019 3:17 AM GMT (Updated: 24 Aug 2019 3:17 AM GMT)
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம், விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் வசித்த பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.
இதையடுத்து மீட்புக் குழுவினர், கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நிலவரப்படி 2 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம், விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் வசித்த பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.
அதன்படி, அங்கு வசித்தவர்களில் பலர் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். இன்று அதிகாலையில் சிலர் தங்கள் பொருட்களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்புக் குழுவினர், கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நிலவரப்படி 2 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X