என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்த விமானத்தை நோக்கி திடீரென ஓடிய வாலிபர்
Byமாலை மலர்23 Aug 2019 10:00 AM GMT (Updated: 23 Aug 2019 10:00 AM GMT)
மும்பை விமான நிலையத்தில் திடீரென வாலிபர் ஒருவர் ஓடுதளத்தில் இருந்த விமானத்துக்கு அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று, பெங்களூரு செல்ல தயார் நிலையில் ஓடுதளத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலையத்தின் பின்புறம் இருந்த குடிசைக்குள் இருந்து ஒரு வாலிபர் ஓடி வந்துள்ளார்.
ஸ்பைஸ் ஜெட் விமானத்துக்கு அருகே வந்த அவர், விமானத்தின் முன்னும் பின்னும் சென்று சுற்றிப் பார்த்தார். பின்னர் தொட்டுப்பார்த்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தலையில் கர்சிப் கட்டிக் கொண்டு வித்தியாசமான முறையில் விமானத்தை சுற்றி ஓடி வந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், ‘விமானத்தின் அருகில் சென்று தொட்டு பார்க்க வேண்டும் என ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன்’ என கூறியுள்ளார். இது குறித்து அந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த குடும்பத்தினர், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி சான்றிதழை கொடுத்தனர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வாலிபரை அனுப்பி வைத்தனர்.
மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று, பெங்களூரு செல்ல தயார் நிலையில் ஓடுதளத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலையத்தின் பின்புறம் இருந்த குடிசைக்குள் இருந்து ஒரு வாலிபர் ஓடி வந்துள்ளார்.
ஸ்பைஸ் ஜெட் விமானத்துக்கு அருகே வந்த அவர், விமானத்தின் முன்னும் பின்னும் சென்று சுற்றிப் பார்த்தார். பின்னர் தொட்டுப்பார்த்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தலையில் கர்சிப் கட்டிக் கொண்டு வித்தியாசமான முறையில் விமானத்தை சுற்றி ஓடி வந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், ‘விமானத்தின் அருகில் சென்று தொட்டு பார்க்க வேண்டும் என ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன்’ என கூறியுள்ளார். இது குறித்து அந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த குடும்பத்தினர், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி சான்றிதழை கொடுத்தனர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வாலிபரை அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X