என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி
Byமாலை மலர்22 Aug 2019 4:26 PM GMT (Updated: 22 Aug 2019 4:26 PM GMT)
1984ம் ஆண்டில் ராஜீவ் காந்தி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். ஆனாலும் அவர் அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் இன்று உரையாற்றினார். தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அல்லது பாஜக அரசை நேரடியாக குறிப்பிடாமல் கடும் விமர்சனம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்று ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.
ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆபத்தில் வைக்க அவர் ஒருபோதும் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் மற்றும் இந்தியாவின் கொள்கையை மாற்ற விரும்புவோருக்கு எதிராக கட்சி தொடர்ந்து போராடும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற செய்தியை ராஜீவ் காந்தி வழங்கினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செய்ததை யாராலும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X