search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி

    1984ம் ஆண்டில் ராஜீவ் காந்தி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். ஆனாலும் அவர் அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் இன்று உரையாற்றினார். தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி  நடைபெற்றது.

    இதில் பேசிய சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அல்லது பாஜக அரசை நேரடியாக குறிப்பிடாமல் கடும் விமர்சனம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்று ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.

    ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆபத்தில் வைக்க அவர் ஒருபோதும் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் மற்றும் இந்தியாவின் கொள்கையை மாற்ற விரும்புவோருக்கு எதிராக கட்சி  தொடர்ந்து போராடும்.

    இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற செய்தியை ராஜீவ் காந்தி வழங்கினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செய்ததை யாராலும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×