என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு
Byமாலை மலர்22 Aug 2019 3:08 AM GMT (Updated: 22 Aug 2019 3:08 AM GMT)
மெட்ரோ ரெயிலில் 5 நாட்களாக பயணம் செய்த பாம்பை, தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடித்த பாம்புபிடி வீரர்கள் வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டனர்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க முடியவில்லை. பின், பாம்புபிடி வீரர்கள் 5 நாட்கள் தீவிரமாக செயல்பட்டதன் மூலம், பாம்பை அவர்கள் பிடித்தனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சுக்நகருக்கு அருகில் மெட்ரோ ரெயில் செல்லும்போது அந்த பாம்பை நாங்கள் கண்டுபிடித்து மீட்டோம். அது 2 அடி நீளம் இருந்தது. பின், வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டோம்” என்றார்.
5 நாட்களாக மெட்ரோ ரெயிலில் கிட்டத்தட்ட 80 முறைக்கும் மேல் அந்த பாம்பு பயணம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பு ‘போன்’ மூலம் பாம்புகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் வந்தது. கடந்த 14-ந்தேதி அன்று பாம்பை மெட்ரோ ரெயிலில் மீண்டும் பார்த்தனர். இருப்பினும் அதை பிடிக்க முடியவில்லை. பின், பாம்புபிடி வீரர்கள் 5 நாட்கள் தீவிரமாக செயல்பட்டதன் மூலம், பாம்பை அவர்கள் பிடித்தனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சுக்நகருக்கு அருகில் மெட்ரோ ரெயில் செல்லும்போது அந்த பாம்பை நாங்கள் கண்டுபிடித்து மீட்டோம். அது 2 அடி நீளம் இருந்தது. பின், வனத்துறையினரின் உதவியுடன் அதை காட்டுப்பகுதியில் விட்டுவிட்டோம்” என்றார்.
5 நாட்களாக மெட்ரோ ரெயிலில் கிட்டத்தட்ட 80 முறைக்கும் மேல் அந்த பாம்பு பயணம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X