search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்
    X
    ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஆளுநரின் ஆலோசகர் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காஷ்மீர்:

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்போது பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,ஜம்மு காஷ்மீரில் ஆளுநரின் ஆலோசகர் கே.கே.சர்மா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஆளுநரின் மக்கள் குறை தீர்க்கும் மையத்தில் நடைபெற உள்ளது.
    Next Story
    ×