search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது.

    மேலும்,சீனாவின் உதவியுடன் ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டுமேன முயற்சி மேற்கொண்டு படுதோல்வியடைந்தது. ஆனாலும், இந்தியா எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்திவருகிறது.

    இந்நிலையில், இமயமலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கோப்பு படம்

    இது குறித்து பேசிய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மேலும், அந்நாட்டுக்கு பாயும் நதிகளை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.        

    Next Story
    ×