search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் அருகே இளம்பெண்ணை கடத்தி 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் மாவட்டத்தில் உள்ள லகுவாலி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி 10 நாட்களாக சிறை வைத்து கற்பழித்தனர்.

    இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலியான வார்த்தைகளை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

    பின்னர் அந்த கும்பல் தொடர்ச்சியாக பலமுறை கற்பழித்து கொடூரமான முறையில் நடந்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக கும்பல் பலாத்காரம் செய்ததால் அந்த இளம்பெண் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    மயக்கம் தெளிந்த இளம்பெண் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை கடத்தி சிறைவைத்து கற்பழித்த 7 பேர் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம் காரணமாக கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×