என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பல்
Byமாலை மலர்21 Aug 2019 5:23 AM GMT (Updated: 21 Aug 2019 5:23 AM GMT)
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் அருகே இளம்பெண்ணை கடத்தி 10 நாட்கள் கற்பழித்த 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் மாவட்டத்தில் உள்ள லகுவாலி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி 10 நாட்களாக சிறை வைத்து கற்பழித்தனர்.
இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலியான வார்த்தைகளை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் தொடர்ச்சியாக பலமுறை கற்பழித்து கொடூரமான முறையில் நடந்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக கும்பல் பலாத்காரம் செய்ததால் அந்த இளம்பெண் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மயக்கம் தெளிந்த இளம்பெண் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை கடத்தி சிறைவைத்து கற்பழித்த 7 பேர் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்சார் மாவட்டத்தில் உள்ள லகுவாலி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி 10 நாட்களாக சிறை வைத்து கற்பழித்தனர்.
இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலியான வார்த்தைகளை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் தொடர்ச்சியாக பலமுறை கற்பழித்து கொடூரமான முறையில் நடந்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக கும்பல் பலாத்காரம் செய்ததால் அந்த இளம்பெண் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மயக்கம் தெளிந்த இளம்பெண் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை கடத்தி சிறைவைத்து கற்பழித்த 7 பேர் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X