என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு
Byமாலை மலர்20 Aug 2019 3:48 PM GMT (Updated: 20 Aug 2019 5:22 PM GMT)
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் உடன் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்த உரையாடலின் போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மிகவும் பாராட்டத்தக்கது. இது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம்தான் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமுக தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இது முற்றிலும் இந்திய அரசியலமைப்புக்கு உள்பட்ட உள்நாட்டு விவகாரம் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் எஸ்பருக்கு இந்தியா சார்பில் வாழ்த்துக்களை ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதே போன்று நேற்று தொலைபேசியில் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X