search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவாகரத்து
    X
    விவாகரத்து

    எனக்கு உணவாக இதைமட்டும்தான் தருகிறார்.. மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும்..

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் வழங்கும் உணவில் கட்டுப்பாடு விதித்ததால், மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து கேட்டுள்ளார்.
    மீருட்:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டினை அனுகியுள்ளார்.

    இதற்கான காரணம் கேட்டபோதுதான் அங்கிருந்த அதிகாரிகளுக்கு வினோதமான அதிர்ச்சி காத்திருந்தது.  மனைவி, தனக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் லட்டு மட்டுமே கொடுப்பதாகவும், அதற்கு இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே கொடுப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து மனைவியிடம் விசாரிக்கையில், 2 வேளைக்கு 8 லட்டு மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவருக்கு நல்லது என மாந்திரீகர் ஒருவர் கூறியுள்ளார். அதனை கேட்டு சில மாதங்களாக கணவருக்கு லட்டு மட்டுமே கொடுத்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    லட்டு

    இவ்வழக்கு குறித்து தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுத்த அதிகாரி கூறுகையில், ‘இந்த வழக்கின் அடிப்படையில் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினோம்.

    அந்த பெண் லட்டு சாப்பிட்டால் மட்டும்தான் கணவருக்கு நல்லது நடக்கும் என தீர்க்கமாக கூறுகிறார். அதனை தவிர வேறு எதையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை’ என கூறியுள்ளார்.

     




     
    Next Story
    ×