என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்... 7 பேர் காயம்
Byமாலை மலர்19 Aug 2019 7:37 AM GMT (Updated: 19 Aug 2019 7:37 AM GMT)
கர்நாடகாவில் குடிபோதையில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், திடீரென கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு, பின்னர் நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது.
இதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி பதிவு வைரலாக பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X