என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு
Byமாலை மலர்18 Aug 2019 12:16 AM GMT (Updated: 18 Aug 2019 12:16 AM GMT)
கேரள கன்னியாஸ்திரி தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
கொச்சி:
கேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தவர் லூசி கலப்புரா.
இவர், ஜலந்தர் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
இந்த நிலையில், இவர் கவிதைகள் எழுதி வெளியிடுகிறார்; கார் வாங்கி உள்ளார், சபை விதிமுறைகளை மீறி வாழ்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.
இவருக்கு கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்தும், மனம் வருந்தவில்லை; சபை திருப்தி அடைகிற வகையில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி, இந்த மாத தொடக்கத்தில் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவரை மடத்தில் இருந்து திரும்ப அழைத்துச்செல்லுமாறு வயநாட்டில் உள்ள அவரது தாயாருக்கு கடிதமும் எழுதப்பட்டது.
ஆனால் அவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
இதை கொச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தவர் லூசி கலப்புரா.
இவர், ஜலந்தர் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
இந்த நிலையில், இவர் கவிதைகள் எழுதி வெளியிடுகிறார்; கார் வாங்கி உள்ளார், சபை விதிமுறைகளை மீறி வாழ்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.
இவருக்கு கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்தும், மனம் வருந்தவில்லை; சபை திருப்தி அடைகிற வகையில் விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி, இந்த மாத தொடக்கத்தில் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவரை மடத்தில் இருந்து திரும்ப அழைத்துச்செல்லுமாறு வயநாட்டில் உள்ள அவரது தாயாருக்கு கடிதமும் எழுதப்பட்டது.
ஆனால் அவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிடம் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
இதை கொச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X