என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது
Byமாலை மலர்17 Aug 2019 11:47 AM GMT (Updated: 17 Aug 2019 11:47 AM GMT)
கேரள மாநிலம் பாலக்காட்டில் 7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ளது எருமையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (22). 7 மாத கர்ப்பிணி.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் டி.எஸ்.பி. தேவசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மகளை அடித்து உதைத்து பிஜூ சித்ரவதை செய்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.
இதனையடுத்து பிஜூவை தேடியபோது அவர் மாயமாகிவிட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிஜூவுக்கும் அவர் வேலை செய்த இடத்தில் இருந்த மனோசாந்தி (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்க தூண்டியது கள்ளக்காதலி மனோசாந்தி என்பது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியே ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். அப்போது தான் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் கள்ளக்காதலி கொடுமைப்படுத்தியதால் ஐஸ்வர்யா கர்ப்பிணி என்றும் பாராமல் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடினர். அப்போது அவர்கள் பயன்படுத்திய செல்போன் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் டி.எஸ்.பி. தேவசி தலைமையிலான போலீசார் திருப்பூர் குமரன் நகருக்கு நேற்று வந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து கேரள அழைத்துச்சென்று ஆலத்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ளது எருமையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (22). 7 மாத கர்ப்பிணி.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் டி.எஸ்.பி. தேவசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மகளை அடித்து உதைத்து பிஜூ சித்ரவதை செய்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.
இதனையடுத்து பிஜூவை தேடியபோது அவர் மாயமாகிவிட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிஜூவுக்கும் அவர் வேலை செய்த இடத்தில் இருந்த மனோசாந்தி (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்க தூண்டியது கள்ளக்காதலி மனோசாந்தி என்பது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியே ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். அப்போது தான் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் கள்ளக்காதலி கொடுமைப்படுத்தியதால் ஐஸ்வர்யா கர்ப்பிணி என்றும் பாராமல் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடினர். அப்போது அவர்கள் பயன்படுத்திய செல்போன் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் டி.எஸ்.பி. தேவசி தலைமையிலான போலீசார் திருப்பூர் குமரன் நகருக்கு நேற்று வந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து கேரள அழைத்துச்சென்று ஆலத்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X