என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு
Byமாலை மலர்17 Aug 2019 10:50 AM GMT (Updated: 17 Aug 2019 10:50 AM GMT)
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாகவும் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு ஒரு பாலமாகவும் இருந்தது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று 17-வது மாநில சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசு நாட்டின் பாதுகாப்பிலும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் முன்னேற வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாகவும், காஷ்மீருக்குள்
ஊடுருவுவதற்கு ஒரு பாலமாகவும் இருந்து வந்தது.
ஊழல் தடுப்புச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம் ஆகியவை அங்கு பொருந்தாது. இது எப்படிப்பட்ட காஷ்மீர்?
எனவே நாட்டு மக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களின் நலனுக்காகவே 370வது சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X