என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமர்நாத் யாத்திரை நிறைவு - 3½ லட்சம் பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்17 Aug 2019 3:31 AM GMT (Updated: 17 Aug 2019 3:31 AM GMT)
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு யாத்திரையில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 587 பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டு யாத்திரை, கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, சிரவண மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதற்கிடையே, இந்த ஆண்டு யாத்திரையை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக மாவட்ட நிர்வாகம், போலீசார், ராணுவம், துணை ராணுவப்படை ஆகியவற்றுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் நன்றி தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டு யாத்திரை, கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, சிரவண மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
கடைசி நாளில், அமர்நாத் கோவில் வாரியத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி அனுப்குமார் சோனி மற்றும் இதர அதிகாரிகள், அமர்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மாநிலத்தில் அமைதியும், முன்னேற்றமும் நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அப்போது, இந்த ஆண்டு யாத்திரையில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 587 பக்தர்கள் தரிசனம் செய்து இருப்பதாக அனுப்குமார் சோனி தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த ஆண்டு யாத்திரையை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக மாவட்ட நிர்வாகம், போலீசார், ராணுவம், துணை ராணுவப்படை ஆகியவற்றுக்கு கவர்னர் சத்யபால் மாலிக் நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X