search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி
    X
    ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி

    ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

    இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே அடுத்த மாதம் 4-ம் தேதி சந்திப்பு நடைபெற உள்ளது.
    டெல்லி:

    ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு 2015 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமைப்பு ரஷியாவில் உலக நாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் முக்கிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

    இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். 

    இந்த சந்திப்பில் செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இந்நிலையில், விளாடிவோஸ்டோக் நகரில் செப்டம்பர் 4 முதல் 6 தேதி வரை கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளதாக ரஷிய நாட்டின் செய்தி தொடர்பாளர் யூரி உஷாகோவ்  தெரிவித்துள்ளார். 

    மேலும், அந்த கூட்டத்தின் போது இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையழுத்தாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.   
    Next Story
    ×