search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி ப சிதம்பரம்
    X
    பிரதமர் மோடி ப சிதம்பரம்

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

    பிரதமர் மோடியின் சுதந்திர தின விழா உரையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    இந்தியா முழுவதும் நேற்று 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பல்வேறு திடங்கள் குறித்து பேசினார்.

    இதில் சிறிய குடும்பம் என்பதும் தேசப்பற்றுக்கான ஒரு செயல்தான். வருமானத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் ஆகியவையும் இடம்பெற்றிருந்தது.

    மோடியின் இந்த மூன்று அறிவிப்பையும் நாம் வரவேற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் டுவிட் செய்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சிறிய குடும்பம், பிளாஸ்டிக் ஒழிப்பு மக்கள் நடவடிக்கையாக மாற வேண்டும். நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிராமப்புறங்களில் முன்னின்று எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறார்கள்.

    ப சிதம்பரம் ட்வீட்

    வருமானத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை என்பதில், நிதி மந்திரி மற்றும் வரி அலுவலகம் மற்றும் விசாரணை அதிகாரிகள் காதில் சத்தமாகவும், தெளிவாகவும் கேட்டு இருக்கும் என்று நம்புகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×