search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கொடியேற்றிய சத்யபால் மாலிக்
    X
    தேசிய கொடியேற்றிய சத்யபால் மாலிக்

    ஜம்மு காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
    ஸ்ரீநகர்:

    நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். 

    அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர்

    கொடியை ஏற்றி வைத்த பின்பு,  துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின்  அணி வகுப்பு மரியாதையையும் ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்றுக்கொண்டார். அப்போது பேசிய சத்யபால் மாலிக், 370 சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது.  காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் சுதந்திர விழா என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×