என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி - பிரதமர் மோடி
Byமாலை மலர்14 Aug 2019 5:13 PM GMT (Updated: 14 Aug 2019 5:13 PM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியாகினர். மேலும், பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட்டில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் வேன் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X