என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்: பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி எச்சரிக்கை
Byமாலை மலர்13 Aug 2019 5:23 PM GMT (Updated: 13 Aug 2019 5:23 PM GMT)
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான உறவை துண்டித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரியின் கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான கேப்டன் அம்ரீந்தர் சிங் வெளியிட்ட செய்தியாவது:
இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்றது அல்ல. இந்திய ராணுவம் மிகவும் ஒழுக்கமும், தேசப்பற்றும் கொண்டது. உங்கள் ஆத்திரமூட்டும் அறிக்கையையும், பிளவுபடுத்தும் கட்டளைகளும் இந்திய ராணுவத்திடம் வேலை செய்யாது. காஷ்மீர் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். ஆகையால் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான உறவை துண்டித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌத்ரி, காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு இழைக்கும் அநீதிக்கு இந்திய ராணுவத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் துணைபோகக் கூடாது என கூறினார். மேலும், காஷ்மீரில் பாதுகாப்பு வீரர்களாக ராணுவத்தில் பணியமர்த்தப்படுவதை பஞ்சாபை சேர்ந்தவர்கள் மறுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரியின் கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியான கேப்டன் அம்ரீந்தர் சிங் வெளியிட்ட செய்தியாவது:
இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்றது அல்ல. இந்திய ராணுவம் மிகவும் ஒழுக்கமும், தேசப்பற்றும் கொண்டது. உங்கள் ஆத்திரமூட்டும் அறிக்கையையும், பிளவுபடுத்தும் கட்டளைகளும் இந்திய ராணுவத்திடம் வேலை செய்யாது. காஷ்மீர் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். ஆகையால் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X