என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதின் கட்காரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
Byமாலை மலர்13 Aug 2019 6:45 AM GMT (Updated: 13 Aug 2019 6:45 AM GMT)
நாக்பூரில் இருந்து மத்திய மந்திரி நிதின் கட்காரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
நாக்பூர்:
மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். இதற்காக நாக்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், இண்டிகோ விமானத்தில் ஏறினார்.
விமானம் புறப்பட தயாரானபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானத்தை டேக் ஆப் செய்ய முடியவில்லை. புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.
விமானத்தில் இருந்த மந்திரி கட்காரி உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X