search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டிகோ விமானம்
    X
    இண்டிகோ விமானம்

    நிதின் கட்காரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

    நாக்பூரில் இருந்து மத்திய மந்திரி நிதின் கட்காரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். இதற்காக நாக்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், இண்டிகோ விமானத்தில் ஏறினார். 

    விமானம் புறப்பட தயாரானபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானத்தை டேக் ஆப் செய்ய முடியவில்லை. புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. 

    மத்திய மந்திரி நிதின் கட்காரி

    விமானத்தில் இருந்த மந்திரி கட்காரி உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டனர். 
    Next Story
    ×