என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி, ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு - எடியூரப்பா
Byமாலை மலர்10 Aug 2019 8:32 AM GMT (Updated: 10 Aug 2019 8:32 AM GMT)
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வெள்ளப் பெருக்கினால் 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது.
தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
தொடர்மழையால் பல மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா, கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் தெரிவித்தார்.
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ஒருசில கிராமங்களையும் மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது.
தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர்மழையால் பல மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா, கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் தெரிவித்தார்.
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ஒருசில கிராமங்களையும் மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X