என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்ஸ் அப் மூலம் தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்த உ.பி. வாலிபர்
Byமாலை மலர்8 Aug 2019 6:04 AM GMT
குவைத் நாட்டில் வேலை பார்த்துவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வாட்ஸ் ஆப் செயலி மூலம் மூன்று முறை தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்
முசாபர்நகர்:
இந்தியாவில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஒருவர் மூன்று முறைதலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். குவைத் நாட்டில் வேலை செய்து வரும் இவர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கடந்த மே மாதம் 27 ம் தேதி அவரது மனைவி உத்தர பிரதேச மாநிலத்தின் சிகேதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை வாப்ஸ் பெறுமாறு அவர் தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வாட்ஸ் ஆப் செயலி மூலம் மூன்று முறை தலாக் கூறிய அந்த நபர், தன் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிகேதா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X