என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உங்களுடன் மாரத்தான் ஓட நான் 19 வயது வாலிபர் அல்ல.. -சுஷ்மா கணவரின் முந்தைய பதிவு
Byமாலை மலர்8 Aug 2019 3:46 AM GMT (Updated: 8 Aug 2019 3:53 AM GMT)
மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் முன்னதாக வெளியிட்ட பதிவு ஒன்று நெகிழ வைத்துள்ளது.
புது டெல்லி:
சுஷ்மா 2019ம் ஆண்டு தேர்தலில் உடல்நலக் குறைவின் காரணமாக போட்டியிடபோவதில்லை என கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதற்கு அவரது கணவர் சுவராஜ் கவுசல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்ததற்கு நன்றி.
1977ம் ஆண்டு உங்களது இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்தது. அன்று முதல் 11 தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள். 4 முறை மக்களவை உறுப்பினர், 3 முறை மாநிலங்களவை உறுப்பினர். 25 வயதில் உங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தீர்கள்.
46 ஆண்டுகளாக இந்த ஓட்டம் நிற்கவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து ஓடிவிட்டேன். நான் இன்னும் 19 வயதுடைய வாலிபர் இல்லை. எனவே, இப்படி ஒரு முடிவுனை எடுத்ததற்கு மிக்க நன்றி' என பதிவிட்டிருந்தார்.
டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சுஷ்மா 2019ம் ஆண்டு தேர்தலில் உடல்நலக் குறைவின் காரணமாக போட்டியிடபோவதில்லை என கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதற்கு அவரது கணவர் சுவராஜ் கவுசல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்ததற்கு நன்றி.
1977ம் ஆண்டு உங்களது இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்தது. அன்று முதல் 11 தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள். 4 முறை மக்களவை உறுப்பினர், 3 முறை மாநிலங்களவை உறுப்பினர். 25 வயதில் உங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தீர்கள்.
46 ஆண்டுகளாக இந்த ஓட்டம் நிற்கவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து ஓடிவிட்டேன். நான் இன்னும் 19 வயதுடைய வாலிபர் இல்லை. எனவே, இப்படி ஒரு முடிவுனை எடுத்ததற்கு மிக்க நன்றி' என பதிவிட்டிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X