என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற மக்களவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்6 Aug 2019 3:04 PM GMT (Updated: 6 Aug 2019 3:04 PM GMT)
ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
ஜூலை மாதம் 27-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டது.
ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய 17-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
ஜூலை மாதம் 27-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மீது இன்று காலையில் இருந்து மக்களவையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இரவு 8 மணிக்குள் இந்த மசோதாக்கள் அனைத்தும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், மக்களவையில் பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி, இந்த கூட்டத்தொடரில் 99 சதவீதம் அளவிலான அலுவல்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதைதொடர்ந்து கூட்டத்தொடரை முடித்துக் கொள்ளலாம் என சபாநாயகரிடம் அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
பின்னர், மக்களவையில் பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி, இந்த கூட்டத்தொடரில் 99 சதவீதம் அளவிலான அலுவல்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதைதொடர்ந்து கூட்டத்தொடரை முடித்துக் கொள்ளலாம் என சபாநாயகரிடம் அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X