என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பருக் அப்துல்லா
Byமாலை மலர்6 Aug 2019 12:51 PM GMT (Updated: 6 Aug 2019 12:51 PM GMT)
ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இரவோடு இரவாக காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இன்று பாராளுமன்ற மக்களவையில் இவ்விவகாரம் எதிரொலித்தபோது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நாங்கள் யாரையும் சிறை வைக்கவில்லை. அவரவர்களின் விருப்பப்படி வீடுகளில் உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக என் விருப்பம்போல் நான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை. என் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே போக முடியாது. உள்ளே வேறு யாரும் வர முடியாது. என் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
இப்போதுகூட நான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்து பேச வந்திருக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டனர். ஆனால், இதயங்களை பிரிக்க முடியுமா? இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவிட முடியுமா?
என்னுடைய இந்தியா மதச்சார்பற்ற, ஒருமைப்பாட்டு உணர்வு கொண்ட அனைவருக்குமே ஆன நாடு என்று நான் நினைத்திருந்தேன். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக போராடிய நாங்கள் இன்று குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறோம்.
தற்போது ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, கொடுங்கோண்மை அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் இல்லாமல் நாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் கற்களை வீசும் கும்பலை சேர்ந்தவர்களோ, கொலையாளிகளோ கிடையாது. சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை எப்போதுமே தேர்வு செய்ததில்லை.
காந்தியின் பாதையை மட்டுமே நாங்கள் பின்பற்றி வந்திருக்கிறோம். இப்போது இப்படி நடப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இரவோடு இரவாக காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
பின்னர், அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானது.
இன்று பாராளுமன்ற மக்களவையில் இவ்விவகாரம் எதிரொலித்தபோது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நாங்கள் யாரையும் சிறை வைக்கவில்லை. அவரவர்களின் விருப்பப்படி வீடுகளில் உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக என் விருப்பம்போல் நான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை. என் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே போக முடியாது. உள்ளே வேறு யாரும் வர முடியாது. என் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
இப்போதுகூட நான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்து பேச வந்திருக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டனர். ஆனால், இதயங்களை பிரிக்க முடியுமா? இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவிட முடியுமா?
என்னுடைய இந்தியா மதச்சார்பற்ற, ஒருமைப்பாட்டு உணர்வு கொண்ட அனைவருக்குமே ஆன நாடு என்று நான் நினைத்திருந்தேன். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக போராடிய நாங்கள் இன்று குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறோம்.
தற்போது ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, கொடுங்கோண்மை அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் இல்லாமல் நாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் கற்களை வீசும் கும்பலை சேர்ந்தவர்களோ, கொலையாளிகளோ கிடையாது. சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை எப்போதுமே தேர்வு செய்ததில்லை.
காந்தியின் பாதையை மட்டுமே நாங்கள் பின்பற்றி வந்திருக்கிறோம். இப்போது இப்படி நடப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X